இலங்கை சிறைச்சாலைகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிறைச்சாலைகளில் புதிதாக மேலும் 8 கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களுடன் சிறைச்சாலைகளில் மாத்திரம் இதுவரை 4855 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்கள் 8 பேரும் தண்டனை கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
இலங்கையில் 82430 பேர் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 464 பேர் உயிரிழந்துள்ளனர்.
77625 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 114,060,490 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,531,025 பேர் உயிரிழந்துள்ளனர்.
89,609,850 பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேவேளை கோவிட் தொற்றாளர்கள் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
அத்துடன், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களில் , பிரேசில், ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 45 நிமிடங்கள் முன்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri