அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2025ஆம் ஆண்டின் முதல் 3 வாரங்களில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதோடு, அதன் எண்ணிக்கை 1,576 ஆகும்.
ஆபத்துள்ள இடங்கள்
கொழும்பு மாவட்டத்தில் இருந்து 491 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 558 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 95 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் டெங்கு நோய் பரவக்கூடிய அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் 22 அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 14 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
