அதிகரிக்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள்
அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் 100 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று (12) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள் அதிகரிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வருடாந்த மதுவரி கட்டணம், தொழில் கட்டணத்திற்காக ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் பாதுகாப்பு பிணைக் வைப்புத் தொகை என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திருத்தங்களுக்கு அமைவான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செலுத்தப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam