எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி : மற்றுமொரு கட்டண உயர்வு
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போக்குவரத்து கட்டணத்தை 5 சதவீதத்தால் உயர்த்துவதற்கு கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்...
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த விலை உயர்வுக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம் என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |