வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமைக்காரியாலம் திறந்து வைப்பு
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமைக்காரியாலயம் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் திறந்து வைக்கப்பட்ள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (13.03.2024) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரியாலய திறப்பு விழா
இதன்போது பிரதேச இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், மக்களுக்கு தேர்தல் தொடர்பிலான விளக்கங்களையும் கட்சியின் பொதுச் செயலாளர் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் வவுனியா அமைப்பாளர்களான பிரியதர்சினி ரசிக்கா மற்றும் ச.நிரேஷ்குமார், அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.