வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறப்பு விழா
வட்டுக்கோட்டையில் பாரதி வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் மாற்றப்பட்டு அந்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது.
விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வீதி திறந்து வைப்பு
அதனை தொடர்ந்து விருந்தினர்களது உரைகள், வீதி திறந்து வைப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.
யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மதகுருமார், வலிமேற்கு பிரதேச செயலாளர் கவிதா உதயகுமார், வலிமேற்கு பிரதேச சபை செயலாளர் சண்முகராஜா பாலரூபன், கிராம சேவையாளர் சிவபாலன் சிவகுமார், பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி கந்தையா சிவராஜா, Dr.MP.நடராஜா, வைத்தியசூரி செ.பரமசிவம்பிள்ளை கா.கோபாலகிருஸ்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
