வவுனியாவில் சிலர் அட்டகாசம்: படுகாயமடைந்த வர்த்தகர் (photos)
வவுனியா - பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து சில தாக்குதல்தாரிகள் தாக்கியதில் வர்த்தகர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (21.04.2023) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாக்குதல்தாரி கும்பல்
வவுனியா - பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மூவர் அடங்கிய தாக்குதல்தாரி கும்பல் ஒன்று சிறுநீர் கழித்துள்ளனர்.
இதன்காரணமாக குறித்த வர்த்தகரால் இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காதீர். அருகில் உள்ள பொது கழிப்பறைக்கு செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டதையடுத்து தாக்குதல்தாரி கும்பல் வர்த்தகர் மீது தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வர்த்தகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஏனைய இருவரை
கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
