மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி
நுகேகொடை மிரிஹானவில் நேற்றிரவு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களின் சுயாதீனமான ஆர்ப்பாட்டம் எனக் கூறினாலும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதன் பின்னணியில் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுயுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் வேட்பாளராக முன்வைக்கப்பட்ட ஒருவர் அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டமைக்கான புகைப்படங்கள் அரசாங்கத்திடம் இருக்கின்றது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எந்த தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கி இருந்தார்.
எனினும் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் பொது சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியதால், குறைந்த பலத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



