நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள்! (Video)

Sri Lanka Police Batticaloa Jaffna Kilinochchi Sri Lanka
By Kumar Nov 18, 2022 12:27 PM GMT
Report

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம்

யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில்  நேற்று (17.11.2022) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: கஜிந்தன் 

நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள்! (Video) | In The North Both Bodies Are Suicides

மட்டக்களப்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பகுதியில் மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போன இளைஞர் நேற்று (17.11.2022) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு, பட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சூரியகுமார் என்னும் 20வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக காணாமல்போன நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (16.11.2022) குறித்த இளைஞனின் வீட்டிற்கு முன்பாகவுள்ள பாழடைந்த காணியிலிருந்த நீர்நிலையிலிருந்து குறித்த இளைஞனின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செய்தி: குமார் 

இளைஞர் தற்கொலை

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியை சேர்ந்த செல்வராசா கஜமுகன் எனும் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள்! (Video) | In The North Both Bodies Are Suicides

இச்சம்பவமானது நேற்று முன்தினம் (16.11.2022) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் அவரது நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுந்தகவல் மூலம் தெரிவித்ததையடுத்து இளைஞனை நண்பர்கள் தேடிய நிலையில் தர்மக்கேணி சனசழூக நிலையத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி: காண்டீபன் 

மட்டக்களப்பு

மட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (68) வயதுடைய வினாசித்தம்பி தாமோதரம் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன்பிடித்தொழிலினை மேற்கொண்டு தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த (16)ம் திகதி பிள்ளைகளுடன் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

நாட்டில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள்! (Video) | In The North Both Bodies Are Suicides

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக உறவினர்கள் தேட ஆரம்பித்ததாகவும் பின்னர் பருத்திச்சேனை கன்னன்குடா ஆற்றுப்பகுதியில் கடற்தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் இன்று தேடிச்சென்ற போது ஆற்றுப்பகுதியில் உள்ள கண்ணா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி:குமார்



மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US