கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - அ.லதாகரன்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதினை தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 3434 ஆக அதிகரித்துள்ளதுடன் 23பேர் இதுவரை மரணித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். பேலியகொடை மீன்சந்தை கொத்தனியையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 8 மணி வரையிலான 24 மணித்தியாலயத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கிழக்கில் தம்பலகா
மத்தில் ஒருவரும், நிந்தவூரில் ஒருவரும், செங்கலடியில் ஒருவரும்,ஏறாவூரில் இரண்டு பேரும், காத்தான்குடியில் இரண்டு பேரும், கோறளைப்பற்று மத்தியில் ஒருவரும், உகணனையில் நான்கு பேரும், தமணனையில் ஒருவர் உட்பட 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 733 பேரும், மட்டக்களப்பில் சுகாதார பிராந்தியத்தில் 909 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 321 பேரும்,கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 1471 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 3434 பேராக கோவிட் தொற்று அதிகரித்துள்ளதுடன், இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 8136 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 17122 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 19954 பேருக்கும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 27871பேருக்கும் உட்பட 73083 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 253 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, அம்பாறை,காத்தான்குடி, திருகோணமலை, உப்புவெளி, ஏறாவூர், உப்புவெளி,கிண்ணியா, உகண ஆகிய பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கோவிட் தொற்று அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதுடன், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
