இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படாதிருந்தால் தனி ஈழம் பெற்றிருப்போம்: கோவிந்தன் கருணாகரம் (Video)
87ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படாது விட்டிருந்தால் தனி ஈழம் பெற்றிருப்போம், தனிநாடு அமைந்திருக்கும் என்று இன்றும் தமிழர்கள் கூறுகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நடைபெற்ற நான்காவது கூட்டத்தொடரில் இன்றைய தினம் (09.02.2023) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
வெளிக்கடை சிறையில் 53 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். தமிழீழவிடுதலை இயக்கம் என்னுடைய இயக்கத்தின் அதாவது, ஆயுத போராட்டத்தை முதன்முதலாக தொடக்கிய இயக்கத்தின் ஆரம்ப கருத்தாக்கள் தங்கத்துரை, குட்டிமணி போன்றவர்கள் மிகவும் கொடூரமான முறையிலே கொல்லப்பட்டார்கள்.
குட்டிமணி நீதிமன்றத்தில் உரையாற்றியபோது, எனக்கு தூக்குத் தண்டனை கொடுக்கின்றீர்கள், இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் நான் ஒரு குட்டிமணியாக இறப்பேன். ஆனால், ஆயிரமாயிரம் குட்டிமணிகள் இந்த நாட்டின் வடக்கு கிழக்கிலே உருவாகுவார்கள். அவர்கள் மூலமாக தமிழீழம் மலரும்.
ஆயுதப் போராட்டம்
அப்படி மலரும் தமிழீழத்தை என்னுடைய கண்ணளால் பார்க்க வேண்டும். ஆகவே என்னுடைய கண்களை ஒரு பார்வையற்ற தமிழனுக்கு வழங்கவேண்டும் என்று கூறியதற்காக அவரை கொன்றது மாத்திரமல்ல, அவருடைய கண்களைத் தோண்டி சப்பாத்துக் கால்களுக்குள் போட்டு மிதித்த வரலாறுகள் கூட இருக்கின்றது.
83 இனக் கலவரத்தை தொடர்ந்து, ஆயுதப் போராட்டம் வீறுகொண்டு எழுந்ததை நீங்கள் அறிவீர்கள். வடக்கு கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள்.
ஆயுதப் போராட்டத்தில் இணைந்தது மட்டுமல்லாமல் மிகவும் உக்கிரமாக இந்த நாட்களிலே போர் புரிந்த வரலாறுகளும் உண்டு.
87ஆம் ஆண்டு 29ஆம் திகதி இலங்கை இந்திய - ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படாது விட்டிருந்தால் இன்றும் தமிழர்கள் கூறுகின்றார்கள் நாங்கள் தனிஈழம் பெற்றிருப்போம் தனிநாடு அமைந்திருக்கும் என்று.... என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 38 நிமிடங்கள் முன்

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri
