கிளிநொச்சியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க மேலும் 15000 தடுப்பூசிகள் தேவை
கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கு இன்னும் 15000 கோவிட் - 19 தடுப்பூசிகள் தேவை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி 50000 பெறப்பட்ட போதிலும் இதுவரையில் 43196 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்றும், நாளையும் ஏனைய தடுப்பூசிகள் முற்று முழுதாக வழங்கப்படும். அத்துடன் 15000 தடுப்பூசிகள் மேலதிகமாக தேவைப்படுகிறது.
அத்தோடு நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 68 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam