மன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு ஆண்டகை தொடர்பில் பிரித்தானிய அரசியல் பிரமுகர்
மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைந்தமை மிகவும் வேதனைக்குரியது என இங்கிலாந்து பிரபுக்கள் சபையின் உறுப்பினரும், பிரித்தானிய தொழிற்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான John Mann தெரிவித்துள்ளார்.
நான் மன்னாருக்கு விஜயம் செய்த மிகவும் பயங்கரமான காலத்தில் இராயப்பு ஜோசப் ஆண்டகையையும் தமிழ் மக்களையும் சந்தித்துள்ளேன்.
அவர் மிக சிறந்த சாதனையாளர். தமிழ் மக்களின் உண்மை, மனித உரிமைகள், நீதி,கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்காக பாடுபட்டார். சிறந்த மாமனிதர். உண்மையான ஆயர்.
அவரது வாழ்க்கை அனைவருக்கும் எப்போதும் முன்னுதாரணமாக இருக்கும். எனது நண்பனை நான் நினைவுகூருவேன் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியை பதிவு யெ்துள்ளார்.
இதேவேளை,மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் யாழ்.திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது பணியில் 25 வருடங்களை நிறைவு செய்து நேற்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
