மைத்திரியை ஜனாதிபதியாக்க ரணில் கொடுத்த பணம்
2015 ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியுதவி செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விக்ரமசிங்க, இந்த பண உதவியை வழங்கியதாக கூறினார்.
பண உதவி
இலங்கை நாடு கொடுத்த பணத்தை அவர் இரட்டிப்பாக்கி மும்மடங்காக்கினார், எனினும் அவரை இன்னும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், 2015 மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பான வழக்கில்,சாட்சியமளிக்க தாம் ஏன் அழைக்கப்படவில்லை என்றும் ஜகத் விதான கேள்வி எழுப்பினார் .
முன்னதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது மருமகன் அர்ஜுனன் அலோசியஸுக்குச் சொந்தமான பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் லாபம் ஈட்ட உதவுவதற்காக, பிணைமுறி ஏலத்தில் தலையிட்டு, உள் தகவல்களை கசியவிட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணையகம் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam