முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்காது சென்ற இம்ரான் கான்

Pakistan
By Independent Writer Feb 28, 2021 08:41 PM GMT
Report

இலங்கையில் முன்னெடுக்கப்படும் கட்டாய தகன விடயத்தில் தலையீடு செய்யவும், ஜெனீவாவில் அரசாங்கத்தை ஆதரித்து, தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட வேண்டாம் எனவும் இலங்கை முஸ்லிம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் பாகிஸ்தான் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்வதற்கான உரிமைகளை வழங்குவதில் பாகிஸ்தான் பிரதமர் தலையீடு செய்ய வேண்டுமமென, முஸ்லிம் இடதுசாரி முன்னணி, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்ததில் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகம் குறிப்பாக மகிழ்ச்சியடைவதாகவும், கோவிட் தொற்றால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க, இலங்கை அரசாங்கத்துடன் உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என தாம் நம்புவதாகவும் அந்த கோரிக்கை மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாட்டின் தலைவராக, தகனம் செய்வதற்கு பதிலாக அடக்கம் செய்வதன் கலாச்சார முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் தாம் கையளித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளதாக, புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவது "இலங்கை நண்பரின் வேலை அல்ல" என பாகிஸ்தான் பிரதமருக்கு ஒப்படைக்கப்பட்ட மகஜரில் சுட்டிக்காாட்டப்பட்டுள்ளதோடு, அவ்வாறு செயற்படுவது, தமிழ் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற நியாயமான சட்ட ரீதியான போராட்டத்திற்கு சேதம் விளைவிப்பதாக அமையும் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"முஸ்லிம்களும் தமிழர்களும் அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களையும், உண்மை மற்றும் நீதியைக் கோரி நிற்கும் கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்களையும் குறிப்பாக குறிப்பிட வேண்டும்.

முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ளூரில் நீதி கிடைக்காததால், இலங்கையில் நல்லிணக்கம் தடுக்கப்பட்டுள்ளது. நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான நாட்டை நோக்கிய எங்கள் பயனம் நிறுத்தப்பட்டுள்ளது.” பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை நிறைவு செய்து புதன்கிழமை பிற்பகல் நாடு திரும்பினார், கோவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக, இரு நாடுகளும் இதுவரை அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்னர், பிரதமர் இம்ரான்கான் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை ஊடகங்களுக்கும் வெளியிடப்படவில்லை. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் மகஜரை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் செயலாளர் எம்.ஆர்.எம் பைசால், முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது எனக் குறிப்பிட்டார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த அரசாங்கம் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை வழங்க மறுத்து வருவதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் கோவிட் தொற்றல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு தலைவர் என்ற வகையில், இலங்கை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் அறிவுறுத்துமாறு, பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் உள்ள சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை வேறு எந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கத்தைப் போல ஏமாற்றவில்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தை ஆதரித்த பௌத்த தேரர்கள், ஒரு மரத்தை காப்பாற்றுவதற்காக வீதிகளில் இறங்கி தமது, ஆடைகளை போர்த்த வேண்டிய நிலைக்கு நாடு இன்று தள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US