மும்மத தலைவர்கள் சிறைப்பிடிப்பு: மட்டக்களப்பு எல்லையிலிருந்து திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்..!

Sri Lankan Tamils Batticaloa Eastern Province
By Independent Writer Aug 22, 2023 07:51 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிகளுக்கு சென்ற தமிழர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் (22.08.2023) மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள கால் நடை பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தினை சேர்ந்த மும்மத தலைவர்களையும் அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்களையும் அந்த பகுதியில் செயற்படும் பௌத்த பிக்கு தலைமையிலான சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களினால் சுமார் நான்கு மணி நேரம் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவமானது ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்ட சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக பார்க்க வேண்டியுள்ளது.

மும்மத தலைவர்கள் சிறைப்பிடிப்பு: மட்டக்களப்பு எல்லையிலிருந்து திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்..! | Imprisonment Religious Leaders In Batticaloa

ஒரு மாவட்டத்தின் மூன்று சமயப் பெரியார்களையும் ஒரு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் சிறைப்பிடித்து வைத்து கொண்டு இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர், நீதிமன்ற சட்டங்களுக்கு சவால் விடும் நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் செயற்படும் போது பிடித்து வைக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் பௌத்த பிக்கு காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற விதம் இந்த நாட்டில் பௌத்த மதத்தவரை தவிர வேறு எந்த மதத்தவருக்கும் பாதுகாப்போ நீதியோ கிடைக்காது என்பதையே மிக ஆழமாக பதிவு செய்திருந்தது.

இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்காலம் குறித்து மாத்திரம் அல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 74 வீத பெரும்பான்மை தமிழர்களினது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் அவர்கள் வாழ்வதற்கான சுதந்திரம் குறித்தும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை எழுப்பி இருந்தது. 

மீண்டும் யுத்த காலத்தை நினைவு படுத்திய இனவாதம்

நேற்றையதினம் பிக்கு மற்றும் அவர்களுடன் வந்த சிங்கள காடையர்கள் செயற்பட்ட விதம், அவர்கள் இந்து குருக்களின் கொண்டையை பிடித்து இழுத்தமை, மதகுருமார் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சாரதிக்கு அடிக்க சென்றமை, வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு பல மணிநேரம் மதகுருமார் கெஞ்சியும் சாவியை கொடுக்காது சுமார் 50 க்கு மேற்பட்டோர் சுற்றிவலைத்துக் நான்கு மணி நேரத்திற்கு மேல் சிறைப்பிடித்து வைத்து கொண்டு அவர்கள் பேசிய வார்த்தைகள் எல்லாம் இந்த நாட்டில் இனியும் சிறுபான்மை இன மக்கள் வாழமுடியாது என்ற உணர்வுகளையே பதிவு செய்தது.

மும்மத தலைவர்கள் சிறைப்பிடிப்பு: மட்டக்களப்பு எல்லையிலிருந்து திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்..! | Imprisonment Religious Leaders In Batticaloa

அச்சுத்திய இனவாதிகள்!

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள் காணொளிகள் வெளிவந்தால் அந்த பகுதியில் நடைபெறும் சட்டவிரோத குடியேற்றம், சட்டவிரோத காடழிப்பு, குறித்த விபரங்கள் வெளிவரும் என்பதோடு அவர்களுடன் சேர்ந்து இயங்கும் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோத்தர்களின் சட்ட விரோத செயற்பாடுகளும் வெளிவந்து விடும் என்பதற்காக முழுக்க முழுக்க சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஊடகவியலாளர்களையே இலக்கு வைத்தனர்.

 ஊடகவியலாளர்களை சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களிடம் இருந்த புகைப்பட கருவிகள், தொலைபேசிகளை பறிப்பதற்கு முயற்சி செய்ததோடு ஊடகவியலாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கடிதங்கள் எழுதி கையெழுத்து வேண்டியும் எடுத்தனர்.

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள் காணொளிகளை எங்கும் பிரசுரிக்க கூடாது என்று கூறி கடிதம் எழுதி கையெழுத்தும் வைக்க சொல்லி அச்சுறுத்திய சம்பவம் இலங்கையில் ஊடாக சுதந்திரம் என்பது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US