கோவிட் சடலங்களை பொதி செய்யும் 15,000 உறை பைகளை இறக்குமதி செய்ய முடிவு
நாட்டிற்கு மேலும் 15,000 சடலம் பொதி செய்யும் உறை பைகளை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக சீனாவில் இருந்து 5000 சடலம் பொதி செய்யும் உறை பைகளை கொள்வனவு செய்ய விலைமனு கோரப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சடலம் பொதி செய்யும் உறை பைகள் தரம் குறைந்தவை என்று பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிய தரமான சடலம் பொதி செய்யும் உறை பைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏற்கனவே தரம் குறைந்த உறை பைகளை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தரம் குறைந்த கோவிட் பாதுகாப்பு அங்கிகள் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளிலும் தெரியவந்துள்ளது.



