அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கான அவசர அறிவுறுத்தல்
இலங்கை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஸ்கட், சவர்க்காரம், பற்பசை, மிளகாய்த்தூள், மசாலாத்தூள் போன்ற பொருட்களில் இந்த மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
எடையைப் பொருட்படுத்தாமல் விலை குறைவாக இருப்பதாக நினைத்து கொள்வனவு செய்வோர் பணத்தை இழக்கின்றார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,