அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன்னர் எரிபொருள் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களுடைய இலக்கை நோக்கிச் செல்வதற்கு போதுமான எரிபொருள் இல்லையென்றால் நெடுஞ்சாலையில் நுழைவதனை தவிர்க்குமாறு நெடுஞ்சாலை பராமரிப்புப் பிரிவு கேட்டுக்கொள்கிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதிய எரிபொருள் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் நுழையக் கூடாது என்ற டிஜிட்டல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இடையிலேயே வானங்கள் நின்றுவிட்டால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.