காலி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
காலி- கொழும்பு வரையான காலி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
காலி வீதியின் கஹவ பிரதேசத்தில் இருந்து தெல்வத்தை வரையான பகுதியில் கடல் சீற்றம் காரணமாக காலி வீதி வரை ஆக்ரோசமான கடல் அலைகள் அடிக்கடி வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேங்கியுள்ள மணல்
இந்நிலையில் கடல் அலைகளின் காரணமாக குறித்த பகுதியில் காலி வீதியின் பல இடங்களில் மணல் தேங்கிக் காணப்படுகின்றது.
அதன் காரணமாக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் வெகு அவதானமாக பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடல் அலைகளில் சிக்கி விடாமல் அவதானமாக வாகனங்களை ஓட்டிச் செல்லுமாறு ஏனைய வாகன சாரதிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |