இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
இதற்கமைய, வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யும் இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு
இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை 2 ஆயிரத்து 858 இலங்கையர்கள் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 5 ஆயிரம் தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.