வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan Apr 18, 2026 05:25 AM GMT
Report

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண அழகக கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்தராசா உதயசங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(17.04.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்த திருக்கோணேஸ்வரம் ஆலய இரதோற்சவம்!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்த திருக்கோணேஸ்வரம் ஆலய இரதோற்சவம்!

ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைப்பது குறித்து கடந்த காலங்களில் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது. அதனை இணைப்பதன் தேவையை தற்போது உணர்கிறோம்.

ஆகையால் அது குறித்து பரிசீலித்து வருகிறோம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் கட்சி சார்ந்த ஒருவர் சிகையலங்கார நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க கூடாது என்றும், வேறு ஒரு தினத்தில் விடுமுறையை வழங்க முடியாதா? ஏனையோரும் குறித்த தொழிலை பழகி செய்தல் வேண்டும் என்று கூறியுள்ளார்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

சிகையலங்கார தொழிலை யாரும் பழகி, முறைப்படி அனுமதி பெற்று செய்யலாம். அதனை நாங்கள் கடந்தகாலம் தொட்டு கூறி வருகிறோம். நாங்கள் அதற்கு எதிர்ப்பானவர்கள் அல்ல. ஞாயிற்றுக்கிழமை என்பது பொதுவான ஒரு விடுமுறை தினம்.

ஆகையால் சிகையலங்காரம் செய்பவர்களுக்கும் ஒரு ஓய்வு தேவை என்பதால் அந்த விடுமுறையை எமது அமைப்பு நடைமுறைப்படுத்துகிறது.அது எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்.

கட்டணம் அதிகரிப்பு

கொரோனாவுக்கு பின்னர் கடந்த 2025 ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் தான் கட்டணமானது எமது தொழிற் சங்கத்தால் அதிகரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டணங்களை புதுப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த காலங்களில் கட்டணம் அதிகரித்தமை தொடர்பாக உள்ளூராட்சி சபைகள், ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் ஆகியன கடுமையான நெருக்கடிகளை கொடுத்தன.

நடைமுறை செலவுகளுக்கு அமைவாகவே நாங்கள் குறித்த காலப்பகுதிக்கு ஒருமுறை கட்டண அதிகரிப்பு செய்து வருகிறோம். மாணவர்களது சிகையலங்காரம் குறித்து நாங்கள் அதிக கரிசினை செலுத்தி வருகிறோம். குறித்த விடயத்தால் எமது தொழிலாளர்களும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்கின்ற பொழுது பாடசாலைகள் சில விடயங்களை செய்யலாம் என்பது தொடர்பாக நமது முன்மொழிவை முன்வைக்கின்றோம்.

மாணவர்களுக்கான சிகை அலங்காரம் பதிவு செய்யும் அட்டை

மாணவர்களுக்கு ஒரு அட்டையினை வழங்குவதன் மூலம், அந்த அட்டையில் சிகையலங்காரம் செய்கின்ற இடங்களை பதிவு செய்ய கோரி, மாணவர்கள் எங்கே சிகை அலங்காரம் செய்கின்றார்கள் என்பதனை கணித்துக் கொள்ளலாம்.

அதுபோன்று எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எவ்வாறு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்ற ஒரு மாதிரி படத்தை முன்மொழிந்து, அதற்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு கட்டணத்தை குறைப்பதற்கு நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

அந்த வகையில் குறித்த முன்மொழிவுக்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு வடக்கு மாகாணம் முழுவதும் 350 அளவிடப்படும் என தீர்மானித்திருக்கின்றோம்.

சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றார். 

குட்டி இங்கிலாந்து நோக்கி படையெடுக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குட்டி இங்கிலாந்து நோக்கி படையெடுக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை - ஈரான் உறுதி : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை - ஈரான் உறுதி : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்



2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US