வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan Apr 18, 2026 05:25 AM GMT
Report

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண அழகக கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்தராசா உதயசங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(17.04.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்த திருக்கோணேஸ்வரம் ஆலய இரதோற்சவம்!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்த திருக்கோணேஸ்வரம் ஆலய இரதோற்சவம்!

ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைப்பது குறித்து கடந்த காலங்களில் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது. அதனை இணைப்பதன் தேவையை தற்போது உணர்கிறோம்.

ஆகையால் அது குறித்து பரிசீலித்து வருகிறோம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் கட்சி சார்ந்த ஒருவர் சிகையலங்கார நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க கூடாது என்றும், வேறு ஒரு தினத்தில் விடுமுறையை வழங்க முடியாதா? ஏனையோரும் குறித்த தொழிலை பழகி செய்தல் வேண்டும் என்று கூறியுள்ளார்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

சிகையலங்கார தொழிலை யாரும் பழகி, முறைப்படி அனுமதி பெற்று செய்யலாம். அதனை நாங்கள் கடந்தகாலம் தொட்டு கூறி வருகிறோம். நாங்கள் அதற்கு எதிர்ப்பானவர்கள் அல்ல. ஞாயிற்றுக்கிழமை என்பது பொதுவான ஒரு விடுமுறை தினம்.

ஆகையால் சிகையலங்காரம் செய்பவர்களுக்கும் ஒரு ஓய்வு தேவை என்பதால் அந்த விடுமுறையை எமது அமைப்பு நடைமுறைப்படுத்துகிறது.அது எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்.

கட்டணம் அதிகரிப்பு

கொரோனாவுக்கு பின்னர் கடந்த 2025 ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் தான் கட்டணமானது எமது தொழிற் சங்கத்தால் அதிகரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டணங்களை புதுப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த காலங்களில் கட்டணம் அதிகரித்தமை தொடர்பாக உள்ளூராட்சி சபைகள், ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் ஆகியன கடுமையான நெருக்கடிகளை கொடுத்தன.

நடைமுறை செலவுகளுக்கு அமைவாகவே நாங்கள் குறித்த காலப்பகுதிக்கு ஒருமுறை கட்டண அதிகரிப்பு செய்து வருகிறோம். மாணவர்களது சிகையலங்காரம் குறித்து நாங்கள் அதிக கரிசினை செலுத்தி வருகிறோம். குறித்த விடயத்தால் எமது தொழிலாளர்களும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்கின்ற பொழுது பாடசாலைகள் சில விடயங்களை செய்யலாம் என்பது தொடர்பாக நமது முன்மொழிவை முன்வைக்கின்றோம்.

மாணவர்களுக்கான சிகை அலங்காரம் பதிவு செய்யும் அட்டை

மாணவர்களுக்கு ஒரு அட்டையினை வழங்குவதன் மூலம், அந்த அட்டையில் சிகையலங்காரம் செய்கின்ற இடங்களை பதிவு செய்ய கோரி, மாணவர்கள் எங்கே சிகை அலங்காரம் செய்கின்றார்கள் என்பதனை கணித்துக் கொள்ளலாம்.

அதுபோன்று எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எவ்வாறு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்ற ஒரு மாதிரி படத்தை முன்மொழிந்து, அதற்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு கட்டணத்தை குறைப்பதற்கு நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

அந்த வகையில் குறித்த முன்மொழிவுக்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு வடக்கு மாகாணம் முழுவதும் 350 அளவிடப்படும் என தீர்மானித்திருக்கின்றோம்.

சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றார். 

குட்டி இங்கிலாந்து நோக்கி படையெடுக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குட்டி இங்கிலாந்து நோக்கி படையெடுக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை - ஈரான் உறுதி : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை - ஈரான் உறுதி : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்



13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US