வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan Apr 18, 2026 05:25 AM GMT
Report

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண அழகக கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்தராசா உதயசங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(17.04.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்த திருக்கோணேஸ்வரம் ஆலய இரதோற்சவம்!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடந்த திருக்கோணேஸ்வரம் ஆலய இரதோற்சவம்!

ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைப்பது குறித்து கடந்த காலங்களில் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது. அதனை இணைப்பதன் தேவையை தற்போது உணர்கிறோம்.

ஆகையால் அது குறித்து பரிசீலித்து வருகிறோம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் கட்சி சார்ந்த ஒருவர் சிகையலங்கார நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க கூடாது என்றும், வேறு ஒரு தினத்தில் விடுமுறையை வழங்க முடியாதா? ஏனையோரும் குறித்த தொழிலை பழகி செய்தல் வேண்டும் என்று கூறியுள்ளார்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

சிகையலங்கார தொழிலை யாரும் பழகி, முறைப்படி அனுமதி பெற்று செய்யலாம். அதனை நாங்கள் கடந்தகாலம் தொட்டு கூறி வருகிறோம். நாங்கள் அதற்கு எதிர்ப்பானவர்கள் அல்ல. ஞாயிற்றுக்கிழமை என்பது பொதுவான ஒரு விடுமுறை தினம்.

ஆகையால் சிகையலங்காரம் செய்பவர்களுக்கும் ஒரு ஓய்வு தேவை என்பதால் அந்த விடுமுறையை எமது அமைப்பு நடைமுறைப்படுத்துகிறது.அது எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்.

கட்டணம் அதிகரிப்பு

கொரோனாவுக்கு பின்னர் கடந்த 2025 ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் தான் கட்டணமானது எமது தொழிற் சங்கத்தால் அதிகரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டணங்களை புதுப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த காலங்களில் கட்டணம் அதிகரித்தமை தொடர்பாக உள்ளூராட்சி சபைகள், ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் ஆகியன கடுமையான நெருக்கடிகளை கொடுத்தன.

நடைமுறை செலவுகளுக்கு அமைவாகவே நாங்கள் குறித்த காலப்பகுதிக்கு ஒருமுறை கட்டண அதிகரிப்பு செய்து வருகிறோம். மாணவர்களது சிகையலங்காரம் குறித்து நாங்கள் அதிக கரிசினை செலுத்தி வருகிறோம். குறித்த விடயத்தால் எமது தொழிலாளர்களும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்கின்ற பொழுது பாடசாலைகள் சில விடயங்களை செய்யலாம் என்பது தொடர்பாக நமது முன்மொழிவை முன்வைக்கின்றோம்.

மாணவர்களுக்கான சிகை அலங்காரம் பதிவு செய்யும் அட்டை

மாணவர்களுக்கு ஒரு அட்டையினை வழங்குவதன் மூலம், அந்த அட்டையில் சிகையலங்காரம் செய்கின்ற இடங்களை பதிவு செய்ய கோரி, மாணவர்கள் எங்கே சிகை அலங்காரம் செய்கின்றார்கள் என்பதனை கணித்துக் கொள்ளலாம்.

அதுபோன்று எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எவ்வாறு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்ற ஒரு மாதிரி படத்தை முன்மொழிந்து, அதற்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு கட்டணத்தை குறைப்பதற்கு நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம்.

வடக்கு - கிழக்கில் சிகையலங்காரம் செய்பவர்களை விமர்சித்தால் உரிய நடவடிக்கை.. முன்வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Important Notice For Hairdressers

அந்த வகையில் குறித்த முன்மொழிவுக்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு வடக்கு மாகாணம் முழுவதும் 350 அளவிடப்படும் என தீர்மானித்திருக்கின்றோம்.

சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றார். 

குட்டி இங்கிலாந்து நோக்கி படையெடுக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குட்டி இங்கிலாந்து நோக்கி படையெடுக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை - ஈரான் உறுதி : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை - ஈரான் உறுதி : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்



16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US