தொடருந்து சேவைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை தொடருந்து நிலையம் வரையான பகுதியில் தொடருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கரையோர தொடருந்து வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (09), நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய மூன்று நாட்களுக்கு இது நடைமுறைப்படுத்தப்படுமென என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்
மேலும், கெம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர வீதியில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படக் கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
