ஜனாதிபதி செயலகத்தில் விளையாட்டு அதிகாரிகளின் முக்கிய சந்திப்பு
2026 ICC ஆண்கள் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை இந்தியாவுடன் இணைந்து நடத்துவதற்கான இலங்கையின் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக, முக்கிய அரச மற்றும் விளையாட்டு அதிகாரிகள் (நேற்று) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமணாயக்க மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) பிரதிநிதிகள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டித் தொடரில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தரநிலைகளை பூர்த்தி செய்யத் தேவையான ஒழுங்குமுறை மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பார்வையாளர்களுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு செயல்முறை
கொழும்பு மற்றும் பல்லேகலையில் உள்ள மூன்று மைதானங்களில் சுமார் 20 போட்டிகளை இலங்கை நடத்தவுள்ள நிலையில், வருகை தரும் பார்வையாளர்களுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு செயல்முறைகள் தொடர்பான சவால்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த சந்திப்பில், இந்த நிகழ்வின் மூலம் சுற்றுலாத்துறையை உயர்த்துவதற்கும் புதிய வருவாய் வழிகளை உருவாக்குவதற்கும் உள்ள பொருளாதார வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஒரு நிலையான போட்டித் தொடரை உறுதி செய்வதற்காக, தேசிய “க்ளீன் இலங்கை” முயற்சிக்கு ஏற்ப செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயாகொந்தா, கல்வி அமைச்சின் விளையாட்டு பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்னல் அனுர அபேவிக்ரம, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸ்ஸல் அப்போன்சு மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஆயுதப் படைகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam