இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு
இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில், வெளிநாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வாரம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதுவரை இலங்கையில் திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் பெற்ற விவாகரத்துகள், இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எனினும் நீதியரசர் சோபித ராஜகருணா, நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், குறித்த நடைமுறையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மகிந்த அல்ல : பசில் மற்றும் கோட்டாபயவின் குடியுரிமையை பறிக்கலாம் - கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி
மேன்முறையீட்டு நீதிமன்றம்
பிரித்தானியாவைச் சேர்ந்த மனுதாரரான லியனகே சம்பிக்க ஹரேந்திர சில்வா என்பவர் 2018 ஆம் ஆண்டு தமது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
தொடர்ந்து தனது சட்டத்தரணி ஊடாக, இலங்கையின் திருமணப் பதிவாளர் நாயகத்தின் 2021 மார்ச் மாத தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கான சான்றிதழொன்றை தாக்கல் செய்துள்ளார்.

எனினும் இலங்கையின் நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் வெளிநாட்டில் பெற்ற அத்தகைய விவாகரத்தை அங்கீகரிக்க முடியவில்லை.
எனவே மனுதாரர் இலங்கையில் உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் ஆணையைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்தே மனுதாரர், இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
இந்தநிலையிலேயே தற்போது இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றங்களில் விவாகரத்தை மேற்கொண்டால், அது இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri