அரச பேருந்துகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரச பேருந்துகளில் பயணிகளுக்கோ அல்லது யாருக்கோ அநீதி இழைக்கப்பட்டால் 1958 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (பெப்ரவரி 27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஒழுக்காற்று தண்டனை
அரச பேருந்துகளில் ஒழுக்கமற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஒழுக்காற்று தண்டனை வழங்கப்படுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மற்ற ஓட்டுநர்களுடன் ஒப்பிடும்போது அரச பேருந்து ஓட்டுநர்கள் அதிக ஒழுக்கம், நட்பு மற்றும் பாதுகாப்பான நபர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri