ஜனாதிபதி முகநூலினூடாக பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், எரிவாயு விநியோகங்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எரிபொருள் விநியோகம், எரிவாயு வாயு விநியோகம் தொடர்பான முறைகேடு இருந்தால், 0711691691 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தொலைபேசி இலக்கத்துடன் இன்று காலை பல முறை தொடர்பு கொண்ட போதிலும் எவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில் மக்களுக்குப் பிரச்சினைகளைக் கூற தொலைபேசி இலக்கத்தை அறிவித்து, அது சம்பந்தமாக அழைப்புகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காமல் இருப்பதால் என்ன பயன் என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.



பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
