உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள், தங்களுக்கான அனைத்துப் பாடங்களினதும் பரீட்சைகள் முடிவடைந்திருந்தால், கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அந்த மாணவர்கள் எந்தவொரு மருத்துவ அதிகாரி பிரிவிலும் தமக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 16 வயதுக்குட்பட்ட 7,45,000 மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லாத வகையில் பாதுகாப்பாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும், 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri