உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள், தங்களுக்கான அனைத்துப் பாடங்களினதும் பரீட்சைகள் முடிவடைந்திருந்தால், கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அந்த மாணவர்கள் எந்தவொரு மருத்துவ அதிகாரி பிரிவிலும் தமக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 16 வயதுக்குட்பட்ட 7,45,000 மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லாத வகையில் பாதுகாப்பாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும், 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2 நாட்கள் முன்

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri
