பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - செய்திகளின் தொகுப்பு
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாளை முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாத மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கத் தயார் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொலைதூரப் பாடசாலைகளுக்குச் செல்ல விரும்பாத மாணவர்கள் தமது பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா(Kapila Perera) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலைகள் திறப்பதற்கு முறையான திட்டம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக ஆசிரியர் மற்றும் அதிபர்களின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள பிரச்சினைக்கு எதிராக நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிள்ளைகளுக்கு ஏதாவது உடல் நல பாதிப்புகள் இருந்தால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 1 - 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri