ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்
வாகன உதிரி பாகங்கள் என்ற போர்வையில் ஜப்பானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலனில் இருந்து, பாகங்களாக பிரித்துக் கொண்டுவரப்பட்ட நான்கு ஜீப் ரக வண்டிகளும், கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்க அதிகாரிகள் விசாரணை
இந்த 5 வாகனங்கள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் இதன் இறுதி மதிப்பீட்டை பெற்று வருவதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த 5 கார்களும் இலங்கை சுங்கத்துக்கு வாகன உதிரிப்பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 6 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam