இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையில் ஐந்து வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களை கருப்புப்பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை மோட்டார் போக்குவரத்து துறையின் தகவல் அமைப்பில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாகனம் வைத்திருப்போருக்கு சிக்கல்
இதன்படி, மோட்டார் போக்குவரத்துத் துறையில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் 60 இலட்சம் வாகனங்கள் மட்டுமே QR குறியீடு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு மேலாக வருமான அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்கள் மாவட்ட வாகன பரிசோதகர்கள் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டு தகவல் அமைப்பிலிருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam
