இலங்கையிலுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள்! சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையிலுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி கூறுகையில்,
தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கிறோம்.
படிப்படியாக திட்டம்
இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் BOP தொடர்பான பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள்.
அந்தத் திட்டம் ஜூன் 2023க்குள் நிறைவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சில இறக்குமதி தொடர்பான தடைகள் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.