கொழும்பு உட்பட நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் உத்தரவு

Colombo People Development Mahindarajapaksa
By Kanamirtha Feb 24, 2022 03:47 PM GMT
Report

தேசிய திட்டத்திற்கு அமைவாக கொழும்பு உட்பட நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் நகர்ப்புற மீளுருவாக்கத் திட்டம் மற்றும் கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்கான ஆதரவுத்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

நகர்ப்புற முறைசாரா குடியேற்றங்களுக்குப் பதிலாக அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்கள் 2010ஆம் ஆண்டு பிரதமர் ஜனாதிபதியாக இருந்தபோதே தொடங்கப்பட்டது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகம நினைவு கூர்ந்தார்.

2024 ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புற குறைந்த வசதிகொண்ட குடியிருப்புகளுக்குப் பதிலாக 50,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதானமாகக் கொழும்பிலுள்ள குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதே பிரதான நோக்கமாகும்.

இதன்படி, 14,611 வீடுகள் ஏற்கனவே பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 5590 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகம பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டங்களின் முதல் காலாண்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்வரும் காலாண்டுகளுக்கான எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார முன்வைத்தார்.

அதற்கமைய, கலிங்க மாவத்தை, அறுநூற்று ஒன்று தோட்டம் (ஸ்டேடியம் கிராமம்) மற்றும் கொலன்னாவ ஆகிய இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்கள் குறித்தும், கலிங்க மாவத்தை மற்றும் கொலம்பகே மாவத்தையில் இந்த ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

குருநாகல் வில்கொடவில் செயற்படுத்தப்பட்டுவரும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான 300 வீட்டுத் திட்டப் பணிகள் குறித்து பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், சீன மானியத்தின் கீழ் 1996 வீடுகள் கிடைத்துள்ளதாகவும், தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ, மஹரகம மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் உதய நாணயக்கார தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான இந்தத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்யத் திட்டமிடுமாறு நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் அறிவுறுத்தினார்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் கொழும்பில் ஆப்பிள் தோட்டம் மூன்று கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படும் 400 வீடுகள், கிம்புலாஎலயில் 472 வீடுகள் மற்றும் மஹரகமவில் 600 வீடுகள் நிர்மாணிக்கப்படுதல் உட்படப் பல திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சிரேஷ்ட கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

குறித்த திட்டம் கொட்டாவ பழதுறுவத்த (பழத்தோட்டம்) பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கலைஞர்களுக்காக 108 வீடுகள் அங்கு நிர்மாணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

6-7 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டிற்காகக் குறைந்த வருமானம் பெறுபவர்களிடமிருந்து தற்போது அறவிடப்படும் கட்டணம் சுமார் 1 மில்லியன் ரூபாவாகும் எனவும், அந்தத் தொகை 30 வருடங்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாவாகவே அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது குத்தகை அடிப்படையில் வாடகை செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டுமென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

'நகர்ப்புறங்களில் 20-30 வருடங்களாக வாடகைக்குக் குடியிருப்பவர்கள் உள்ளனர். ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்துக் குடியிருப்பவர்களும் உண்டு. குழந்தைகளைப் பிரதான பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்காகச் சிலர் இவற்றைச் செய்கின்றனர்.

எனவே, முறைசாரா குடியிருப்புகளை அகற்ற வேண்டுமாயின், இந்த வாடகைக்குக் குடியிருப்பவர்களுக்கும் வீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தை வழங்க வேண்டும். அதற்கான அளவுகோல்களை அமைச்சு வகுத்து அமைச்சரவையின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிப்பது பயனுள்ளதாக அமையும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரச திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் இது தொடர்பாக அடையாளம் காணப்பட்ட பெறுமதி மிக்க காணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் அதிகாரிகள் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.

'அரசாங்கங்கள் மாறும்போது மாறாத தேசியத் திட்டத்திற்கமைய நமது நாடு வளர்ச்சியடைய வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் ஒரு தேசிய திட்டம் அவசியம்.

எனவே, எங்கும் நிறைந்துள்ள காணிகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களுடன் விரிவான விவாதங்களுக்குப் பின்னர் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம். வீடமைப்புத் திட்டங்களை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, போக்குவரத்து நெரிசல், பாடசாலை தேவைகள் மற்றும் சுற்றாடல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அதற்கமைய தேசிய திட்டத்திற்கு அமைவாக அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, பிரதமரின் செயலாளர் திரு.அனுர திசாநாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் மகிந்த குணரத்ன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.எஸ்.பி யாலேகம, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, பணிப்பாளர் நாயகம் என்.பி.கே.ரணவீர மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US