கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனவே, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் டீசலுக்கு விண்ணப்பித்துள்ள போதிலும் தங்களுக்கு உரிய முறையில் கிடைக்காதமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலைய ரேடார் அமைப்புகளை இயக்குவது உட்பட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அத்தியாவசிய சேவைகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
