மட்டக்களப்பு மாவட்டத்தில் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை இன்றைய தினம் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத்தின் 231வது படைப்பிரிவும் இராணுவத்தின் மருத்துவ பிரிவும் இணைந்து இன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ரா சினேகா தடுப்பூசிகளை இராணுவத்தினர் ஏற்றினர்.
பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் இதுவரையில் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்கள் கிராம சேவையாளர்கள் ஊடாக இனங்காணப்பட்டு இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெருமளவான இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய முதலாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதைக் காணமுடிந்தது.






வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
