கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்! நாளை மறுதினம் முதல் புதிய நடைமுறை
இணையவழி மூலம் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும்15ஆம் திகதி(நாளை மறுதினம்) முதல் இந்த பணி ஆரம்பிக்கப்படவுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், விரும்பும் எவரும் குடிவரவுத் திணைக்களத்திற்கு வந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு
கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையும் வழமை போன்று இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை வீட்டிற்கே வரவழைக்கும் செயற்பாடு நடைமுறையில் இருக்கும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
