அநுர குமாரவை அன்புடன் ஏற்றுக்கொண்ட ஐ எம் எப்
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எவ்வளவு நெருக்கமாக செயல்படுகிறது என்பதை, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, இன்று நாடாளுமன்றில் எடுத்துரைத்துள்ளார்.
இதன் காரணமாகவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவையும் தற்போதைய அரசாங்கத்தையும் அதன் 'உண்மையான அன்பு' (True Love )என்று, ஐ எம் எப் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலான எதிர்க்கட்சிகள்
பெரும்பாலான எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, ஐ எம் எப் ஐ தங்கள் உண்மையான அன்பு என்று நினைத்தன.
இருப்பினும், ஐ எம் எப் அவர்களைக் கைவிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை மிகவும் திறமையானவராக ஏற்றுக்கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அதனால்தான், சர்வதேச நாணய நிதியத் தலைவர், அநுர குமாரவை 'துணிச்சலானவர் என்று கூறியுள்ளதாக, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
