இலங்கையில் தமிழர்களை இல்லாமல் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் உடந்தையாக இருக்கப்போகின்றதா! சிறீதரன் கேள்வி (Video)
இந்த நாட்டிலே தமிழர் பகுதிகளை கபளீகரம் செய்து, தமிழர்களை இலங்கையிலே இல்லாமல் செய்வதில் இந்த நாடு மிக முக்கியமான பாத்திரத்தை கொண்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்திற்கு உடந்தையாக இருக்கப்போகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
''காணாமலாக்கப்பட்டவர்கள் இதுவரை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகவே இருக்கும் நிலையிலும், எங்களது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழ் தேசிய இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலிலும், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளது என்பதைதான் நாம் பார்க்கின்றோம்'' எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இந்த வாரம் இலங்கை அரசியல் பரப்பில் பேசப்பட்ட முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறது எமது அரசியல் பார்வை நிகழ்ச்சி,

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
