ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பாகது பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பேணுவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மற்றும் தூதுக்குழுவின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி பீட்டர் பிரேயர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக எதிரிசிங்க, தென்கிழக்காசிய மற்றும் மத்திய பொருளாதார விவகாரங்கள் (இருதரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
