ஐ.எம்.எப். கடன் நிபந்தனைகள் மிகவும் மோசமானவை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மிகவும் பயங்கரமானது, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானவை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனைச் சிலர் புதையல் கிடைத்துவிட்டது போல் கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை
இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்க மாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது.
பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீளச் செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதியக் கடனால் எங்கும் மீண்டுள்ளதா?
நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான
நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
