இலங்கை நிறைவேற்றாத சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்
தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை ஜூன் 12ஆம் திகதி அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எவ்வாறாயினும், இலங்கை அதன் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நிதி மேலாண்மை
சர்வதேச நாணய நிதியத்தின் வெரிட் ஆய்வின் அண்மைய புதுப்பிப்பின்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 25வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டுள்ளதோடு நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.16 நிறைவேற்றப்படவில்லை. மற்றும் 15 பொறுப்புக்கள் குறித்து தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத 16 உறுதிமொழிகளை ஆராயும்போது அவற்றில் 7 நிபந்தனைகள் நிதி மேலாண்மை சம்பந்தப்பட்டவையாகும்.
ஆறு நிபந்தனைகள் நிதி வெளிப்படைத்தன்மை விடயத்திலும், 3 நிபந்தனைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri