சர்வதேச நாணய நிதியத்தின் பிடிக்குள் இலங்கை மத்திய வங்கி..! வெளியான தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் இலங்கை மத்திய வங்கி அதன் பிடிக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த மசோதாவை தாக்கல் செய்வதும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும். ஆனால் இன்று நாம் கடன் வாங்குவோம்.
நாளை அந்தப் பணம் ஆவியாகிவிடும். நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குப்படுத்தும் மத்திய வங்கி, நாட்டின் கட்டுப்பாட்டை இழந்தால், அந்த இழப்பு நிரந்தரமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri