கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு : 15 படகுகள் பறிமுதல்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், 15 மணல் ஏற்றிய படகுகளுடன் நேற்று(06.03.2026) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உப்பாறு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆற்றுப்பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த
இதன்போது, ஆற்றில் மணல் ஏற்றிய நிலையில் காணப்பட்ட 15 படகுகளையும், அதில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட 15 மணல் படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கிண்ணியா பொலிஸார், சந்தேகநபர்களை இன்று(07) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.



ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri