முல்லைத்தீவில் அதிகரிக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - முள்ளியவளை கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள கணுக்கேணி குளத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் தொடர்ச்சியாக மணல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு மணல் அகழ்வதால் குளத்தின் அலகரை பகுதியில் பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் போக்வுரத்து செய்யமுடியாத நிலையில் வீதிகளும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
வீதிக்கு பாரிய பாதிப்பு
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு தொடருமாக இருந்தால் குளத்திற்கும் வீதிக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் மணல் அகழ்வாளர்கள் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் கண்டுகொள்ளதா நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்துடன் இவ்வாறான சம்பவத்தினை உரிய திணைக்கள அதிகாரிகள் கவனத்தில் எடுத்து உடன் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
