வவுனியாவில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு: அபிவிருத்தி திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவு(Photos)
வவுனியா குளத்து நீரேந்து பிரதேசத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதனால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கோவில்குளம் கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.
உடனடியாக அகற்ற கட்டளை
சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியானது (22.05.2023)ஆம் திகதிக்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்களால் உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்படுகின்றது.
வேலிகளை அகற்ற தவறும் பட்சத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கோவில்குளம் கமநல சேவை நிலையத்தால் பொருத்தமான நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வேலிகளை அகற்றுவதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு
நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.





வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
