அதிநவீன வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் ரக வாகனத்தை கைப்பற்றி அரசாங்க ஏலத்தின் மூலம் மீண்டும் இறக்குமதியாளருக்கே விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் மூன்று வாகனங்களுடன் ஹம்மர் ரக வாகனம் ஒன்று சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,