யாழில் சட்டவிரோத சொத்து குவிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை
யாழில் சட்டவிரோதமான சொத்து குவிப்புடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் கைத்துப்பாக்கிகள் இருக்கின்றதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இன்னொரு நபரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றை படம் எடுத்து whatsapp மூலம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் சந்தேகநபருக்கு அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு
இதன் அடிப்படையில் குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கைத்துப்பாக்கியின் படத்தை தனக்கு அனுப்பியவர் தொடர்பான விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |