பொலிஸாரை கண்டவுடன் மயக்கமடைந்த தொழிலதிபர்!

CID - Sri Lanka Police Ratnapura Sri Lanka Police Investigation
By Dharu Feb 05, 2025 04:27 AM GMT
Report

வாகன மோசடி குறித்த இரகசிய  தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் கலவானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்த ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த சோதனையின் போது நடந்த ஒரு சிறப்பு சம்பவமாக, வாலானா பொலிஸ் அதிகாரிகள் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியபோது, ​​சந்தேக நபரான 'போல்கொட்டுவே கடா' என்று அழைக்கப்படும் தொழிலதிபர் பயந்து மயக்கமடைந்து உடனடியாக விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக அவர், இரத்தினபுரி மருத்துவமனையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தொழில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தொழில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஏழு கோடி ரூபாய்

'போல்கொட்டுவே கடா' என்று அழைக்கப்படும் குறித்த நபரிடம் கடந்த 2 ஆம் திகதி ஐந்து வாகனங்கள் மீட்க்கப்பட்டதோடு, அதில் இரண்டு கார்கள், இரண்டு ஜீப் வண்டிகள் மற்றும் ஒரு டிஃபென்டர் ரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

பொலிஸாரை கண்டவுடன் மயக்கமடைந்த தொழிலதிபர்! | Illegal Car Owner Faints Upon Seeing Police

இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் நிலையத் உயர் தலைமை ஆய்வாளர் இந்திக வீரசிங்க கூறுகையில்,

“ பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர் போலி இயந்திர எண் மற்றும் சேசிஸ் எண்ணைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்

சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கால்டஸ் கார் ஒன்று இருந்தது. அது இயக்க முடியாத நிலையில் இருந்தது.

பொலிஸாரை கண்டவுடன் மயக்கமடைந்த தொழிலதிபர்! | Illegal Car Owner Faints Upon Seeing Police

மேலும் மற்றுமொரு ஜப்பானிய  காரின் சேசிஸ் பகுதியும் ஒருங்கினைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால், இந்த தொழிலதிபர் "கல்வி அமைச்சகம்" மற்றும் "சாலை மேம்பாட்டு ஆணையம்" ஆகிய நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட பலகைகளைக் சில வாகனங்களை ஓட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US