இலங்கைக்கு கடத்த இருந்த பாரியளவு காய்ந்த இஞ்சி பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு தொன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இராமநாதபுரம் - மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரச அதிகாரி ஒருவருக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய கடிதம்.. விடுதலைப் புலிகளை வைத்து பழிவாங்கும் செயல்
பல இலட்சம் மதிப்பு
அதன்போது இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார் ஒரு தொன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல இலட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மற்றும் சரக்கு வாகனம் இரண்டையும் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



